என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திண்டுக்கல் அருகே வங்கியில் இணையதள முடக்கத்தால் வாடிக்கையாளர்கள் அவதி
கன்னிவாடி:
திண்டுக்கல் அருகே மூலசத்திரத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இயங்கி வருகிறது. இஙகு சுற்று வட்டார 19 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சேமிப்பு உள்ளிட்ட கணக்குகள் வைத்துள்ளனர். மேலும் 100 நாள் வேலை திட்டம், அரசின் உதவித் தொகை ஆகியவற்றுக்கும் இதே வங்கியில் விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளர்கள் வரவு செலவு வைத்துள்ளனர்.
கடந்த 1 மாதமாக இணைய தளம் முடங்கியுள்ளதால் பொது மக்கள் அவதியடைந்து வருகின்றனர். தினசரி 10 முதல் 15 நிமிடம் வரையே இணையதளம் இயங்குகிறது. இதனால் வங்கி ஊழியர்கள் வாடிக்கையாளர்களை திருப்பி அனுப்புகின்றனர்.
எனவே ஏமாற்றத்துடன் செல்லும் பொதுமக்கள் ஒரு நாள் முழுவதும் வங்கியிலேயே செலவிட வேண்டிய நிலை உள்ளது என புலம்புகின்றனர்.
இந்த வங்கியில் 13 பேர் வேலை பார்த்து வந்தனர். படிப்படியாக 7 ஆக குறைத்து தற்போது 3 ஊழியர்கள் மட்டுமே உள்ளனர். இதனால் தினசரி வாடிக்கையாளர்களுக்கும் வங்கி ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.
இணையதளம் முடங்கியது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தினசரி பொதுமக்கள் பணம் எடுக்க மற்றும் கணக்கில் செலுத்த முடியாமல் அவதியடைந்து வருகின்றனர்.
எனவே இதற்கு தீர்வு காண வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்