search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திண்டுக்கல் அருகே வங்கியில் இணையதள முடக்கத்தால் வாடிக்கையாளர்கள் அவதி
    X

    திண்டுக்கல் அருகே வங்கியில் இணையதள முடக்கத்தால் வாடிக்கையாளர்கள் அவதி

    திண்டுக்கல் அருகே வங்கியில் இணையதளம் முடங்கியதால் வாடிக்கையாளர்கள் அவதியடைந்து வருகின்றனர்.

    கன்னிவாடி:

    திண்டுக்கல் அருகே மூலசத்திரத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இயங்கி வருகிறது. இஙகு சுற்று வட்டார 19 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சேமிப்பு உள்ளிட்ட கணக்குகள் வைத்துள்ளனர். மேலும் 100 நாள் வேலை திட்டம், அரசின் உதவித் தொகை ஆகியவற்றுக்கும் இதே வங்கியில் விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளர்கள் வரவு செலவு வைத்துள்ளனர்.

    கடந்த 1 மாதமாக இணைய தளம் முடங்கியுள்ளதால் பொது மக்கள் அவதியடைந்து வருகின்றனர். தினசரி 10 முதல் 15 நிமிடம் வரையே இணையதளம் இயங்குகிறது. இதனால் வங்கி ஊழியர்கள் வாடிக்கையாளர்களை திருப்பி அனுப்புகின்றனர்.

    எனவே ஏமாற்றத்துடன் செல்லும் பொதுமக்கள் ஒரு நாள் முழுவதும் வங்கியிலேயே செலவிட வேண்டிய நிலை உள்ளது என புலம்புகின்றனர்.

    இந்த வங்கியில் 13 பேர் வேலை பார்த்து வந்தனர். படிப்படியாக 7 ஆக குறைத்து தற்போது 3 ஊழியர்கள் மட்டுமே உள்ளனர். இதனால் தினசரி வாடிக்கையாளர்களுக்கும் வங்கி ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.

    இணையதளம் முடங்கியது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தினசரி பொதுமக்கள் பணம் எடுக்க மற்றும் கணக்கில் செலுத்த முடியாமல் அவதியடைந்து வருகின்றனர்.

    எனவே இதற்கு தீர்வு காண வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    Next Story
    ×