search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரோட்டில் பெண் வி‌ஷம் குடித்து தற்கொலை - போலீசார் விசாரணை
    X

    ஈரோட்டில் பெண் வி‌ஷம் குடித்து தற்கொலை - போலீசார் விசாரணை

    ஈரோடு அருகே கணவரை இழந்த பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோடு வீரப்பன்சத்திரம், எம்.ஜி.ஆர். வீதியை சேர்ந்தவர் ஜெகநாதன். இவரது மனைவி சுதா (வயது 41). இவர்களுக்கு 2 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.

    சுதா ஈரோடு தாலுகா அலுவலகத்தில் மனு எழுதி கொடுக்கும் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் சுதாவின் கணவர் ஜெகநாதன் கடந்த 6 மாதத்திற்கு முன்பு இறந்து விட்டார்.

    நேற்று வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டு மாலையில் சுதா வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் தனது அறைக்கு சென்ற சுதா திடீரென வி‌ஷம் குடித்து மயங்கினார்.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மகள்கள் இது குறித்து அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து சுதாவை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    எனினும் சிகிச்சை பலனின்றி சுதா இன்று நள்ளிரவு பரிதாபமாக இறந்தார். சுதா எதற்காக தற்கொலை செய்துகொண்டார்? என்ற காரணம் தெரியவில்லை.

    இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    Next Story
    ×