search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சப்-இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல் - 2 பேருக்கு வலைவீச்சு
    X

    சப்-இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல் - 2 பேருக்கு வலைவீச்சு

    வேதாரண்யம் அருகே சப்-இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் காவல் சரகம், வாய்மேடு காவல் நிலையத்தில் தனிப்பிரிவு சப்இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் சந்திரமோகன். இவரது சொந்த ஊர் தேத்தாகுடி ஆகும்.

    இவர் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு சென்ற போது குரவப்புலம் சித்தி விநாயகர் கோவில் அருகே ரோட்டில் நின்றிருந்த 2 பேர் அவரை வழிமறித்து தகராறு செய்தனராம். மேலும் அவர்கள் தங்களது மோட்டார் சைக்கிளால் மோதி சிமெண்ட் ஓட்டால் அவரை தாக்கினார்களாம்.

    இதில் படுகாயமடைந்து சந்திரமோகனை மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையிலும், பின்னர் மேல் சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வேதாரண்யம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய சத்தியசீலன், சிவராஜன் ஆகிய 2 பேரை தேடி வருகிறார்கள். #tamilnews
    Next Story
    ×