search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராகுல்காந்தியை பிரதமர் ஆக்க களப்பணி ஆற்றுவோம்- கரூர் காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம்
    X

    ராகுல்காந்தியை பிரதமர் ஆக்க களப்பணி ஆற்றுவோம்- கரூர் காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம்

    கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ராகுல்காந்தியை பிரதமராக்க ஒற்றுமையுடன் களப்பணியாற்ற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. #rahulgandhi #congress
    கரூர்:

    கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கரூர் கோவை ரோட்டில் உள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சின்னசாமி தலைமை தாங்கினார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பேங்க் சுப்பிரமணியன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஸ்டீபன் பாபு, நகர தலைவர் சவுந்தர்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    ராஜஸ்தான்-சத்தீஷ்கர் தேர்தல் வெற்றியை தொடர்ந்து வருகிற பாராளுமன்ற தேர்தலில் தலைவர் ராகுல்காந்தியை பிரதமராக்க ஒற்றுமையுடன் களப்பணியாற்ற வேண்டும். சென்னைக்கு வருகை தரும் சோனியாகாந்தியை வரவேற்க கரூரில் இருந்து நிர்வாகிகள்-உறுப்பினர்கள் திரளானோர் செல்ல வேண்டும். 

    நகராட்சியிலுள்ள வீடுகளுக்கு வரி உயர்த்தியதை திரும்ப பெற்று கொண்டு, மீண்டும் பழையபடி குறைந்தபட்ச கட்டணத்தை வரியாக வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

    கூட்டத்தில் பொருளாளர் அமுதா சுப்பிரமணியம், முன்னாள் வட்டார தலைவர் ஆடிட்டர் ரவிச்சந்திரன், தான்தோன்றிகுமார், லியோ சதீஷ் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். #rahulgandhi #congress
    Next Story
    ×