search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொட்டியம் அருகே வங்கி ஊழியர் மர்ம மரணம்
    X

    தொட்டியம் அருகே வங்கி ஊழியர் மர்ம மரணம்

    தொட்டியம் அருகே வங்கி ஊழியர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தகவல் அறிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தொட்டியம்:

    திருச்சி மாவட்டம் தொட்டியம்  கோட்டைமேடு தட்டாரத் தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(63) ஓய்வு பெற்ற வங்கி ஊழியர். இவர் நேற்று காலை தொட்டியம் பாலசமுத்திரம் தட்டாங்கொட்டை பாலம் அருகில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அருகில் அவர் ஓட்டி சென்ற மொபட் நிறுத்தப்பட்டிருந்தது. 

    இது குறித்து  தகவலறிந்த தொட்டியம் போலீசார் சம்பவ இடத்திற்குசென்று ரவிச்சந்திரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவ மனைக்குஅனுப்பி வைத்தனர். 

    இது குறித்து தொட்டியம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத  பரிசோதனைக்கு பின்னர் தான் ரவிச்சந்திரன் எவ்வாறு இறந்தார் என்பது தெரியவரும். 
    Next Story
    ×