என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தொட்டியம் அருகே வங்கி ஊழியர் மர்ம மரணம்
Byமாலை மலர்14 Dec 2018 1:14 PM GMT (Updated: 14 Dec 2018 1:14 PM GMT)
தொட்டியம் அருகே வங்கி ஊழியர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தகவல் அறிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தொட்டியம்:
திருச்சி மாவட்டம் தொட்டியம் கோட்டைமேடு தட்டாரத் தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(63) ஓய்வு பெற்ற வங்கி ஊழியர். இவர் நேற்று காலை தொட்டியம் பாலசமுத்திரம் தட்டாங்கொட்டை பாலம் அருகில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அருகில் அவர் ஓட்டி சென்ற மொபட் நிறுத்தப்பட்டிருந்தது.
இது குறித்து தகவலறிந்த தொட்டியம் போலீசார் சம்பவ இடத்திற்குசென்று ரவிச்சந்திரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவ மனைக்குஅனுப்பி வைத்தனர்.
இது குறித்து தொட்டியம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனைக்கு பின்னர் தான் ரவிச்சந்திரன் எவ்வாறு இறந்தார் என்பது தெரியவரும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X