search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரையில் 6 கிலோ கஞ்சா பறிமுதல் - பெண் உள்பட 2 பேர் கைது
    X

    மதுரையில் 6 கிலோ கஞ்சா பறிமுதல் - பெண் உள்பட 2 பேர் கைது

    மதுரையில் 6 கிலோ கஞ்சா விற்ற பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை நகரில் கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இருப்பினும் சமூக விரோதிகள் கஞ்சா விற்பனை செய்வது நடந்து வருகிறது.

    குறிப்பாக பெரியார் பஸ் நிலையம், மாட்டுத்தாவணி, கீரைத் துறை, அவனியாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்பனை நடக்கிறது.

    இந்த நிலையில் பீ.பி. சாவடி மெயின் ரோட்டில் கஞ்சா விற்பனை நடப்பதாக எஸ்.எஸ்.காலனி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி, போலீஸ்காரர்கள் ராமலிங்கம், சுஜாதா ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

    அப்போது சிட்டா லாச்சி நகர் சந்திப்பில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்த பேரையூர், காளாம் பட்டியைச் சேர்ந்த அல்லிக் கொடி (46) என்பவரையும், திருப்பரங்குன்றதைச் சேர்ந்த அருண்பாண்டி (19) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

    இவர்களிடம் இருந்து 6 கிலோ கஞ்சா மற்றும் ரூ.1,000 பறிமுதல் செய்யப்பட்டது.

    Next Story
    ×