என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புயலால் வீடு சேதம் - வேதாரண்யம் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை
Byமாலை மலர்13 Dec 2018 5:49 PM GMT (Updated: 13 Dec 2018 5:49 PM GMT)
புயலால் வீடு சேதமடைந்ததால் வேதாரண்யம் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள மணியன்தீவு கிராமத்தை சேர்ந்தவர் ராசு (வயது48). விவசாயி. இவருடைய மனைவி சுமதி (40). இவர்கள் கூரை வீட்டில் வசித்து வந்தனர். இந்த கூரை வீடு, கஜா புயலினால் சேதமானது.
இதனால் ராசு, தனது வீட்டின் மீது தார்ப்பாயை போட்டு மூடி, குடும்பத்துடன் குடியிருந்து வந்தார்.
புயலால் வீடு சேதமாகி விட்டதே என்ற மனவேதனையுடன் ராசு இருந்து வந்தார். இதுபற்றி அவர் தனது உறவினர்களிடம் வருத்தமாக கூறியுள்ளார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று ராசு விஷத்தை குடித்தார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
நேற்று அதிகாலை அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து அவருடைய மனைவி சுமதி, வேதாரண்யம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகவேலு, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அகோரம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புயலில் வீடு சேதமடைந்ததால் ஏற்பட்ட மன வேதனையில் விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ராசுவுக்கு 4 மகள்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள மணியன்தீவு கிராமத்தை சேர்ந்தவர் ராசு (வயது48). விவசாயி. இவருடைய மனைவி சுமதி (40). இவர்கள் கூரை வீட்டில் வசித்து வந்தனர். இந்த கூரை வீடு, கஜா புயலினால் சேதமானது.
இதனால் ராசு, தனது வீட்டின் மீது தார்ப்பாயை போட்டு மூடி, குடும்பத்துடன் குடியிருந்து வந்தார்.
புயலால் வீடு சேதமாகி விட்டதே என்ற மனவேதனையுடன் ராசு இருந்து வந்தார். இதுபற்றி அவர் தனது உறவினர்களிடம் வருத்தமாக கூறியுள்ளார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று ராசு விஷத்தை குடித்தார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
நேற்று அதிகாலை அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து அவருடைய மனைவி சுமதி, வேதாரண்யம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகவேலு, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அகோரம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புயலில் வீடு சேதமடைந்ததால் ஏற்பட்ட மன வேதனையில் விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ராசுவுக்கு 4 மகள்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X