search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயலலிதா மரண விசாரணை - ஓ.பன்னீர்செல்வம் 20-ந்தேதி ஆஜராக சம்மன்
    X

    ஜெயலலிதா மரண விசாரணை - ஓ.பன்னீர்செல்வம் 20-ந்தேதி ஆஜராக சம்மன்

    ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் 20-ந்தேதி ஓ.பன்னீர்செல்வம் ஆஜராக சம்மன் அனுப்பி உள்ளது. #ArumugasamyCommission #OPS
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

    இதில் ஜெயலலிதாவின் உதவியாளர்கள், பாதுகாவலர்கள், டிரைவர்கள், அப்பல்லோ டாக்டர்கள், அரசு டாக்டர்கள் உள்பட 150-க்கும் மேற்பட்டவர்கள் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளனர்.

    இதில் 20-க்கும் மேற்பட்டவர்களிடம் சசிகலாவின் வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தி உள்ளார்.

    ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றபோது முதல்-அமைச்சர் பொறுப்பில் இருந்த ஓ.பன்னீர்செல்வத்திடம் விசாரணை நடத்த வேண்டும் என்று ஆணையத்தில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.



    அதை ஏற்று டிசம்பர் 20-ந்தேதி ஓ.பன்னீர்செல்வம் விசாரணை ஆணையத்தில் ஆஜராகுமாறு ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது.

    இதேபோல் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் அ.தி.மு.க. செய்தி தொடர்பாளரும், அமைப்பு செயலாளருமான சி.பொன்னையன் ஆகியோர் 18-ந்தேதி விசாரணை ஆணையத்தில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது. #ArumugasamyCommission #OPS

    Next Story
    ×