search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கஜா புயல் பாதிப்பு- முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.87.88 கோடி குவிந்தது
    X

    கஜா புயல் பாதிப்பு- முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.87.88 கோடி குவிந்தது

    கஜா புயலால் பாதிக்கப்பட்டோருக்கு பொதுமக்கள் நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கிய நன்கொடைகளை சேர்த்து 87 கோடியே 88 லட்சத்து 62 ஆயிரத்து 791 ரூபாய் குவிந்தது. #GajaCyclone
    சென்னை:

    “கஜா” புயல் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், கடலூர், திண்டுக்கல், சிவகங்கை, கரூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் வரலாறு காணாத பாதிப்புகளை ஏற்படுத்தியது.

    வாழ்வாதாரங்களை இழந்த மக்களுக்கு உதவிடவும், நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளவும், முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடைகள் வழங்குமாறு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.


    பொதுமக்கள் நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கிய நன்கொடைகளை சேர்த்து 87 கோடியே 88 லட்சத்து 62 ஆயிரத்து 791 ரூபாய் குவிந்தது. #GajaCyclone
    Next Story
    ×