search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேன்கனிக்கோட்டையில் கூலி தொழிலாளி கொலை
    X

    தேன்கனிக்கோட்டையில் கூலி தொழிலாளி கொலை

    தேன்கனிக்கோட்டையில் பணத் தகராறில் கூலி தொழிலாளியை கீழே தள்ளி விட்டதில் பலத்த காயம் அடைந்த அவர் பரிதாபமாக இறந்தார்.
    தேன்கனிக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டியை அடுத்த குடக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 60). கூலித் தொழிலாளி. இவரது மகன் மாரியப்பன் (25). இவர் அதே பகுதியைச் சேர்ந்த சிவருத்ரா என்பவரிடம் கடனாக பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாரியப்பனிடம் சென்று பணத்தை கேட்பதற்காக சிவருத்ரா அவரது வீட்டிற்கு சென்றார். அங்கு மாரியப்பன் தந்தை ராமகிருஷ்ணனிடம் கேட்டார். அப்போது தனது மகன் வீட்டில் இல்லை என்றும், வெளியே சென்றுள்ளார் என்று கூறியுள்ளார். பணத்தை வாங்கி கொண்டு பணத்தை தராமல் இழுத்தடித்து வருவதாக கூறி ராமகிருஷ்ணனிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.

    இதனால் இருவருக்கும் தகராறில் ஈடுபட்டனர். பின்னர் கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த சிவருத்ரா ராமகிருஷ்ணனை கீழே தள்ளி விட்டார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உடனே அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் சிவருத்ராவை தப்பி விடாமல் சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர்.

    இந்த சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் அஞ்செட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ராமகிருஷ்ணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ராமகிருஷ்ணனை தாக்கி கீழே தள்ளிவிட்டு கொலை செய்த சிவருத்ராவை அக்கம் பக்கத்தினர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    Next Story
    ×