என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பூர் அருகே பனியன் நிறுவன பெண் ஊழியரிடம் நகை பறிப்பு
Byமாலை மலர்12 Dec 2018 12:01 PM GMT (Updated: 12 Dec 2018 12:01 PM GMT)
திருப்பூர் அருகே பனியன் நிறுவன பெண் ஊழியரிடம் நகை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்:
திருப்பூர் காந்தி நகர் இ.பி. காலனியை சேர்ந்தவர் கிருஷ்ண குமார். இவரது மனைவி நித்தா (27). அப்பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் அக்கவுண்டண்ட் ஆக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் வேலைக்கு நடந்து சென்றார். பழனிசாமி நகரில் சென்ற போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் நித்தா கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் நகையை பறித்தனர்.உடனே சுதாரித்து கொண்ட நித்தா செயினை இறுக்கி பிடித்தார். இதில் செயின் அறுந்து 3 பவுன் நித்தாவிடமும், மற்ற 3 பவுன் வாலிபர்களிடமும் சிக்கியது. நித்தா சத்தம் போட்டார். இதனை கேட்டதும் அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர்.அதற்குள் 2 வாலிபர்களும் தப்பி சென்று விட்டனர்.
இது குறித்து அனுப்பர்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு நகை பறித்த 2 வாலிபர்களையும் தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X