search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமங்கலம் பகுதியில் 15-ந் தேதி மின் நிறுத்தம்
    X

    திருமங்கலம் பகுதியில் 15-ந் தேதி மின் நிறுத்தம்

    திருமங்கலம் பகுதியில் 15-ந் தேதி மின் நிறுத்தம் ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    பேரையூர்:

    திருமங்கலம் மின் வினியோக செயற்பொறியாளர் ரமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருமங்கலம் துணை மின் நிலையத்தில் வருகிற 15-ந் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.

    எனவே அந்த நேரத்தில் திருமங்கலம் நகர் பகுதிகள், உலகாணி, சித்தாலை, சாத்தாங்குடி, புதுப்பட்டி, ஆலம்பட்டி, அச்சம்பட்டி, சிவரக்கோட்டை, மேலக்கோட்டை, மைக்குடி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

    கப்பலூர் துணை மின் நிலையத்திலும் 15-ந் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பராமரிப்பு பணி நடைபெறுகிறது.

    எனவே அந்த சமயத்தில் கப்பலூர், கப்பலூர் பகுதி தியாகராஜர் மில், உச்சப்பட்டி, தனக்கன்குளம், கூத்தியார்குண்டு, தோப்பூர், முல்லை நகர், ஆஸ்டின்பட்டி, செட்டிகுளம், கரடிக்கல் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

    மேற்கண்டவாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×