என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பழனி அருகே கொலை வழக்கில் தலைமறைவாக இருந்தவர் 20 ஆண்டுகளுக்கு பின் கைது
பழனி:
பழனி அருகே உள்ள ஆயக்குடி டி.கே.என். புதூரைச் சேர்ந்தவர் நாட்டுத்துரை (வயது 47). இவர் கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவியிடம் இருந்து பிரிந்து வாழ்ந்து வந்தார். அப்போது 1997-ம் ஆண்டு ஏற்கனவே திருமணமாகிய ஒரு பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். அவருக்கு 2 வயதில் பெண் குழந்தை இருந்தது. இதனால் தனக்கு பிறக்கும் குழந்தைக்கு சொத்து கிடைக்காது என நாட்டுத்துரை சந்தேகப்பட்டார்.
இதனால் 2-வது மனைவியின் குழந்தையை கழுத்தை நெறித்து கொலை செய்து விட்டு கலிக்கநாயக்கன்பட்டியில் உள்ள ஒரு குளத்தில் உடலை வீசினார். போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். ஜாமீனில் வந்த நாட்டுத்துரை பின்னர் 2-வது மனைவியுடன் தலைமறைவாகி விட்டார்.
போலீசார் பல இடங்களில் அவரை தேடி வந்தனர். இந்நிலையில் டெல்லியில் அவர் இருப்பதையும், அங்கு டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருவதையும் சப்-இன்ஸ்பெக்டர் அழகர் சாமி தலைமையிலான போலீசார் கண்டறிந்தனர்.
இதனையடுத்து டெல்லி சென்ற போலீசார் நாட்டு துரையை கைது செய்து பழனி நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்