search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாரதிய ஜனதாவுடன் ரஜினிகாந்த் உஷாராக இருக்க வேண்டும்- இளங்கோவன்
    X

    பாரதிய ஜனதாவுடன் ரஜினிகாந்த் உஷாராக இருக்க வேண்டும்- இளங்கோவன்

    நடிகர் ரஜினிகாந்த் பாரதிய ஜனதாவுடன் உஷாராக இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் மாநில முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார். #congress #Elangovan #Rajinikanth #BJP
    ஈரோடு:

    ஈரோட்டில் இன்று காங்கிரஸ் மாநில முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராக ராகுல்காந்தி பதவியேற்று ஓராண்டாகிறது. நடந்து முடிந்த தேர்தல்களில் 3 மாநிலங்களில் காங்கிரஸ் வெற்று பெற்றுள்ளது. மோடியை வீழ்த்தும் வகையில் ராகுல்காந்தி வளர்ந்துள்ளார்.

    இந்த தோல்வியை ஏற்று கொண்டு மோடி பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். தமிழிசை பேச்சு மரண ஓலம் போல் உள்ளது. அவர் சொல்வது போல் சிறிய தோல்வி, பெரிய தோல்வி என்று எதுவும் கிடையாது. தமிழிசை பாரதிய ஜனதாவை விட்டு தனிக்கட்சி தொடங்க வேண்டும். அப்போது தான் அவர் ஒரு வார்டிலாவது வெற்றி பெற முடியும்.


    நண்பர் ரஜினிகாந்த் கட்சி தொடங்காமல் நிம்மதியாக இருக்க வேண்டும். பா.ஜனதா வலுவிழந்து வருகிறது என்று ரஜினி கூறியதை நான் வரவேற்கிறேன். நடிகர் ரஜினிகாந்த் பி.ஜே.பி.யுடன் உஷாராக இருக்க வேண்டும்.

    நடிகர் கமல்ஹாசன் கட்சி தொடங்கி ஊர் ஊராக சுற்றி கொண்டிருக்கிறார். ரிசர்வ் வங்கி கவர்னர் உள்ளிட்ட அதிகாரிகள் ராஜினாமா செய்வது மோடியின் செயல்பாடுதான் காரணம். தெலுங்கானாவில் சந்திரபாபு நாயுடுவுடன் கூட்டணி வைத்ததால் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டது என்பது எனது தனிப்பட்ட கருத்து.

    கஜா புயல் பாதிப்பிலும் கமி‌ஷன் அடிக்க தமிழக அரசு ஆரம்பித்துள்ளது. சென்னிமலையில் பெட்சீட் தேங்கி கிடக்கிறது. இதை வாங்காமல் வெளி மாநிலங்களில் கமி‌ஷனுக்காக கொள்முதல் செய்துள்ளனர்.

    இதே நிலை நீடித்தால் வரும் தேர்தலில் அ.தி.மு.க. டெபாசீட் வாங்காது. தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி பலமாக உள்ளது. வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளில் வெற்றி பெறும்.

    இவ்வாறு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார். #congress #Elangovan #Rajinikanth #BJP
    Next Story
    ×