search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வங்கக்கடலில் புயல் சின்னம் - 15, 16ந்தேதிகளில் கன மழை எச்சரிக்கை
    X

    வங்கக்கடலில் புயல் சின்னம் - 15, 16ந்தேதிகளில் கன மழை எச்சரிக்கை

    வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக 15, 16-ந்தேதிகளில் சென்னை மற்றும் வட தமிழகத்தில் மிதமான மழையும் ஓரிரு இடங்களில் மிக கன மழையும் பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. #Rain #Bayofbengal
    சென்னை:

    சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது:-

    தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டி இந்தியப் பெருங்கடல் பகுதியில் வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. அது தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிலவுகிறது.

    அடுத்த 24 மணி நேரத்தில் இது காற்றழுத்தமாகவும் 15-ந்தேதி ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாகவும் (புயல் சின்னம்) மாறி தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழகம் நோக்கி நகரும்.

    இதன் காரணமாக 15, 16-ந்தேதிகளில் 2 நாட்களுக்கு சென்னை மற்றும் வட தமிழகத்தில் மிதமான மழையும் ஓரிரு இடங்களில் மிக கன மழையும் பெய்யும்.



    மீனவர்கள் இன்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கும், நாளை (13-ந்தேதி) தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிக்கும், 15-ந்தேதி தென்மேற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிக்கும் மீன் பிடிக்க செல்ல வேண்டாம், ஆழ்கடலில் மீன் பிடித்துக்கொண்டு இருக்கும் மீனவர்கள் இன்று மாலைக்குள் கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே ஆழ்ந்த காற்றழுத்த மண்டலம் புயலாக மாறி 15-ந்தேதி சென்னையை நெருங்கும் என்றும் 16-ந்தேதி வடக்கு நோக்கி நகர்ந்து அன்று இரவு 10 மணிக்கு மேல் நெல்லூருக்கும், மசூலிப்பட்டினத்துக்கும் இடையே கரையை கடக்கும் என்றும் தனியார் வானிலை அமைப்புகள் தெரிவித்து உள்ளன. #Rain #Bayofbengal

    Next Story
    ×