search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    2019-ம் ஆண்டுக்கான ஐகோர்ட்டு விடுமுறை தினங்கள் அறிவிப்பு
    X

    2019-ம் ஆண்டுக்கான ஐகோர்ட்டு விடுமுறை தினங்கள் அறிவிப்பு

    2019-ம் ஆண்டுக்கான சென்னை ஐகோர்ட்டு விடுமுறை தினங்கள் குறித்த அறிவிப்பை ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் சி.குமரப்பன் வெளியிட்டுள்ளார். #HighCourt #Holidays
    சென்னை:

    2019-ம் ஆண்டுக்கான சென்னை ஐகோர்ட்டு விடுமுறை தினங்கள் குறித்த அறிவிப்பை ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் சி.குமரப்பன் வெளியிட்டுள்ளார்.

    இதுகுறித்து தலைமை பதிவாளர் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சென்னை ஐகோர்ட்டுக்கு 2019-ம் ஆண்டு மே 1-ந்தேதி முதல் ஜூலை 2-ந்தேதி வரை கோடை விடுமுறை விடப்படுகிறது. அக்டோபர் 5-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை தசரா விடுமுறையும், டிசம்பர் 25-ந் தேதி முதல் 31-ந்தேதி வரை கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான விடுமுறையும் விடப்படுகிறது. ஏப்ரல் 27-ந்தேதி, சனிக்கிழமையை தவிர மற்ற அனைத்து சனிக்கிழமைகளும் விடுமுறை ஆகும்.

    ஜனவரி 1-ந்தேதி புத்தாண்டு விடுமுறை ஆகும். பொங்கல் பண்டிகைக்காக ஜனவரி 14-ந் தேதி முதல் 17-ந் தேதி வரையிலும், மகாவீர் ஜெயந்திக்காக ஏப்ரல் 17-ந்தேதியும், புனித வெள்ளிக்காக ஏப்ரல் 19 மற்றும் 18-ந்தேதிகளிலும் விடுமுறை அளிக்கப்படுகிறது.

    தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மே 1-ந்தேதியும், ரம்ஜான் பண்டிகைக்காக ஜூன் 5-ந்தேதியும், பக்ரீத் பண்டிகைக்காக ஆகஸ்டு 12-ந்தேதியும், சுதந்திர தினத்துக்காக ஆகஸ்டு 15-ந் தேதியும், கிருஷ்ண ஜெயந்திக்காக ஆகஸ்டு 23-ந் தேதியும் விடுமுறை அளிக்கப்படுகிறது.

    விநாயகர் சதுர்த்திக்காக செப்டம்பர் 2-ந் தேதியும், மொஹரத்துக்காக செப்டம்பர் 10-ந்தேதியும், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்.2-ந்தேதி யும் விடுமுறை விடப்படுகிறது.

    இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை, விடுமுறை நாளான (அக்டோபர் 27-ந்தேதி) ஞாயிற்றுக்கிழமை வருகிறது. அதனால், ஐகோர்ட்டுக்கு அக்டோபர் 28 மற்றும் 29-ந்தேதிகளில் விடுமுறை விடப்படுகிறது. அதேபோல, கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 23 மற்றும் 24-ந்தேதிகளில் விடுமுறை அளிக்கப்படுகிறது.

    இதுதவிர, குடியரசு தினம், தெலுங்கு வருடப்பிறப்பு, தமிழ் வருடப்பிறப்பு, மிலாது நபி ஆகியவை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வருகிறது.

    இவ்வாறு அந்த அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளது. #HighCourt #Holidays 
    Next Story
    ×