search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடையத்தில் விவசாயி வீடு புகுந்து 78 பவுன் நகை கொள்ளை வழக்கில் துப்பு துலங்குகியது- 2 தனிப்படை அமைப்பு
    X

    கடையத்தில் விவசாயி வீடு புகுந்து 78 பவுன் நகை கொள்ளை வழக்கில் துப்பு துலங்குகியது- 2 தனிப்படை அமைப்பு

    கடையத்தில் 78 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பற்றி துப்பு துலக்கியதையடுத்து கொள்ளையர்களை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
    கடையம்:

    நெல்லை மாவட்டம் கடையம் வாசுகிரி நகரை சேர்ந்தவர் திருமால் (வயது 60), விவசாயி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டை பூட்டிவிட்டு மனைவி, மகளுடன் பாவூர்சத்திரத்தில் உள்ள மாமனார் வீட்டுக்கு சென்றார்.

    நேற்று முன்தினம் இரவு திருமால் மற்றும் அவருடைய குடும்பத்தினர் வீடு திரும்பினார்கள். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

    இதில் அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனே வீட்டின் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த பொருட்கள் வெளியே சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் இருந்த 78 பவுன் நகைகள் மாயமாகி இருந்தது.

    எனவே, யாரோ மர்ம நபர்கள் வீட்டில் ஆள் இல்லாததை தெரிந்து கொண்டு பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் அவர்கள் பீரோவை உடைத்து அதில் இருந்த நகைகளை கொள்ளையடித்து சென்றதாக தெரிகிறது. கொள்ளையடிக்கப்பட்ட நகையின் மதிப்பு ரூ.15 லட்சத்து 60 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது.

    இதுகுறித்து திருமால் கடையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆதிலட்சுமி மற்றும் போலீசார் வீட்டுக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் அங்கு கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர்.

    மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது மோப்பம் பிடித்துவிட்டு சிறிது தூரம் ஓடி நின்றது. ஆனால், யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இந்த துணிகர கொள்ளை குறித்து போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    கொள்ளை பற்றி துப்பு துலக்கவும், கொள்ளையர்களை பிடிக்கவும் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் கொள்ளை குறித்து துப்பு துலங்கியதாக தெரிகிறது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கடந்த மாதம் அருகில் உள்ள பாரதி நினைவுநகர் பகுதியில் விஜிலா ஐசக்(60) என்பவரது வீட்டில் 51 கிராம் நகை, ரூ.20 ஆயிரம், பான் கார்டு, ஏ.டி.எம். கார்டு ஆகியவை கொள்ளை போயின. இரு சம்பவங்களிலும் ஒரே நபர் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். தொடர் கொள்ளை சம்பவங்களால் கடையம் பகுதி மக்கள் பீதியில் உள்ளனர். #tamilnews
    Next Story
    ×