search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வருமான வரி சோதனை - பாலாஜி குழுமம் நிறுவனங்களில் ரூ.110 கோடி முறைகேடு
    X

    வருமான வரி சோதனை - பாலாஜி குழுமம் நிறுவனங்களில் ரூ.110 கோடி முறைகேடு

    பாலாஜி குழுமம் நிறுவனங்களில் நடைபெற்ற வருமான வரி சோதனையில் ரூ.110 கோடி முறைகேடு நடந்து உள்ளது. #ITRaid

    சென்னை:

    சென்னையில் உள்ள பாலாஜி குழும நிறுவனங்களில் கடந்த 8-ந்தேதி வருமானவரி துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

    தமிழகம் மற்றும் ஆந்திராவில் உள்ள அந்த நிறுவனத்துக்கு சொந்தமான பல்வேறு இடங்களிலும் சோதனை நடந்தது.

    சென்னையில் தி.நகரில் உள்ள அலுவலகம் மற்றும் பூந்தமல்லியில் உள்ள மதுபான தொழிற்சாலையில் அதிகாரிகள் சோதனை நடந்தது.

    கடந்த 3 நாட்களாக நடந்த சோதனை நேற்றுடன் முடிந்தது. இதில் ரூ.55 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து வருமானவரி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    இந்த நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது. எங்களது சோதனை முடிவடைந்து விட்டது. போலியான பில்லை தயாரித்து செலவினங்கள் செய்ததாக ரூ.110 கோடிக்கு மேல் கணக்கில் வராத வருமானம் ஈட்டி இருப்பது தெரிய வந்தது. நிறுவனங்களில் இருந்து கைப்பற்றப்பட்ட பணத்துக்கும் கணக்கில் வராத பணத்துக்கும் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

    விரைவில் இந்நிறுவனத்தின் இயக்குனர் மற்றும் ஊழியர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள். #ITRaid

    Next Story
    ×