என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
வருமான வரி சோதனை - பாலாஜி குழுமம் நிறுவனங்களில் ரூ.110 கோடி முறைகேடு
சென்னை:
சென்னையில் உள்ள பாலாஜி குழும நிறுவனங்களில் கடந்த 8-ந்தேதி வருமானவரி துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
தமிழகம் மற்றும் ஆந்திராவில் உள்ள அந்த நிறுவனத்துக்கு சொந்தமான பல்வேறு இடங்களிலும் சோதனை நடந்தது.
சென்னையில் தி.நகரில் உள்ள அலுவலகம் மற்றும் பூந்தமல்லியில் உள்ள மதுபான தொழிற்சாலையில் அதிகாரிகள் சோதனை நடந்தது.
கடந்த 3 நாட்களாக நடந்த சோதனை நேற்றுடன் முடிந்தது. இதில் ரூ.55 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து வருமானவரி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
இந்த நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது. எங்களது சோதனை முடிவடைந்து விட்டது. போலியான பில்லை தயாரித்து செலவினங்கள் செய்ததாக ரூ.110 கோடிக்கு மேல் கணக்கில் வராத வருமானம் ஈட்டி இருப்பது தெரிய வந்தது. நிறுவனங்களில் இருந்து கைப்பற்றப்பட்ட பணத்துக்கும் கணக்கில் வராத பணத்துக்கும் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
விரைவில் இந்நிறுவனத்தின் இயக்குனர் மற்றும் ஊழியர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள். #ITRaid
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்