search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மோடியை மக்கள் நிராகரித்து விட்டார்கள்- இளங்கோவன்
    X

    மோடியை மக்கள் நிராகரித்து விட்டார்கள்- இளங்கோவன்

    5 மாநில தேர்தல் முடிவுகள் மூலம் மோடியையும், பா.ஜனதாவையும் மக்கள் நிராகரித்து விட்டார்கள் என்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்தார். #Results2018 #Modi #EVKSElangovan
    ஈரோடு:

    தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இன்று மாலை மலர் நிருபருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் நடந்த தேர்தல்களில் காங்கிரஸ் முன்னணி பெற்றுள்ளது. இந்த 3 மாநிலங்களிலும் வெற்றி உறுதியாகி விட்டது.

    இந்த தேர்தல் முடிவு மூலம் மோடியையும், பா.ஜனதாவையும் மக்கள் நிராகரித்து விட்டார்கள். காங்கிரசையும் ராகுலையும் மக்கள் ஏற்று கொண்டு உள்ளார்கள். இந்த தேர்தல் முடிவு பாராளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும். பாராளுமன்ற தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். ராகுல்காந்தி பிரதமராக நல்ல பிரகாசம் உருவாகி உள்ளது.


    தெலுங்கானா மாநிலத்தை பொறுத்த வரை அங்கு சந்திரபாபு நாயுடுயுடன் கூட்டணி வைத்ததை மக்கள் ஏற்று கொள்ளவில்லை. சந்திரபாபு நாயுடுவிடம் கூட்டணி அமைத்திருக்காவிட்டால் அங்கும் காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கும்.

    தமிழகத்திலும் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி மகத்தான வெற்றி பெறும். அ.தி.மு.க.வையும், பாரதிய ஜனதாவையும் மக்கள் நிராகரித்து விடுவார்கள்.

    இவ்வாறு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.  #Results2018 #Modi #EVKSElangovan
    Next Story
    ×