search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மோட்டார் சைக்கிளோடு கிணற்றில் பாய்ந்த இளைஞர் உயிருடன் மீட்பு
    X

    மோட்டார் சைக்கிளோடு கிணற்றில் பாய்ந்த இளைஞர் உயிருடன் மீட்பு

    போச்சம்பள்ளி அருகே இருசக்கர வாகனத்தில் வந்து, கிணற்றில் தவறி விழுந்த இளைஞரை தீயணைப்புத் துறையினர் உயிருடன் மீட்டனர்.
    போச்சம்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த பாரண்டப்பள்ளி அருகிலுள்ள காட்டுவென்றஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த சங்கர் என்பவரது விவசாய கிணற்றில் இளைஞரின் அலறல் சத்தம் கேட்டது. அருகில் இருந்தவர்கள் ஓடிச்சென்று கிணற்றை எட்டி பார்த்தபோது, கிணற்றின் இளைஞர் ஒருவர் தவறி விழுந்து, காப்பாற்றும்படி கதறியது தெரியவந்தது. பின்னர் அங்கு திரண்ட பொதுமக்கள் போச்சம்பள்ளி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த போச்சம்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலர் ஆறுமுகம் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் விழுந்த இளைஞரை பொதுமக்கள் உதவியுடன் மீட்டனர்.

    பின்னர் விசாரணையின்போது, கிணற்றில் விழுந்த இளைஞர் தாதம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கம் என்பவரது மகன் சதீஷ்குமார் (28) என்பதும் இவர் கட்டிட தொழில் செய்துவருவதாகவும் தெரியவந்தது.

    இவர் தாதம்பட்டியில் இருந்து போச்சம்பள்ளி வீட்டிற்கு தேவையான மளிகை சாமான்கள் வாங்க சென்றபோது வீரியம்பட்டி ஏரியின் வளைவில் வேகமாக சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து, விவசாய கிணற்றில் இரு சக்கர வாகனத்துடன் விழுந்துள்ளார் என்பது தெரியவந்தது.

    கிணற்றில் விழுந்த இளைஞருக்கு காலில் முறிவு ஏற்பட்டதால் 108 ஆம்புலன்ஸ் மூலம் போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் சந்திரன் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    Next Story
    ×