search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காட்பாடி அருகே நில அளவையாளர் வீட்டில் நகை கொள்ளை
    X

    காட்பாடி அருகே நில அளவையாளர் வீட்டில் நகை கொள்ளை

    காட்பாடி அருகே நில அளவையாளர் வீட்டில் நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர்:

    காட்பாடி அடுத்த சேவூரை சேர்ந்தவர் தியாபிளஸ் (வயது 68). ஓய்வு பெற்ற நில அளவையாளர். இவரது மனைவி வசந்தி, சம்பவத்தன்று தம்பதியினர் வீட்டை பூட்டிவிட்டு காட்பாடியில் உள்ள வங்கிக்கு வந்தனர்.

    இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவில் இருந்த 8 பவுன் நகையை கொள்ளையடித்து கொண்டு தப்பி சென்று விட்டனர்.

    வீட்டிற்கு திரும்பிய தம்பதியினர் வீட்டின் பூட்டு உடைக்கபட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது நகைகள் கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது.

    இது குறித்து தியாபிளஸ் திருவலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×