search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எம்.ஜி.ஆர் நகரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை
    X

    எம்.ஜி.ஆர் நகரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை

    எம்.ஜி.ஆர் நகரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    எம்.ஜி.ஆ.ர் நகர் சூளைபள்ளம் மிசா ஆபிரகாம் தெருவைச் சேர்ந்தவர் அமிர்தராஜ். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.

    இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியே சென்று விட்டு மாலையில் திரும்பி வந்தார்.

    அப்போது வீட்டு கதவு பூட்டை உடைந்து திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த ரூ.49ஆயிரம் மற்றும் 5 சவரன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிய வந்தது.

    இதுகுறித்து எம்.ஜி.ஆர். நகர் போலீசில் அமிர்தராஜ் நேற்று புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் சொர்ண களஞ்சியம் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து வருகிறார்.

    இதுதொடர்பாக வீட்டின் மேல்தளத்தில் வசிக்கும் அமிர்தராஜின் சகோதரரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×