search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் - 207 வழக்கு ஆவணங்கள் சி.பி.ஐ.யிடம் ஒப்படைப்பு
    X

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் - 207 வழக்கு ஆவணங்கள் சி.பி.ஐ.யிடம் ஒப்படைப்பு

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான 207 வழக்குகளின் ஆவணங்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தனர். #Thoothukudifiring
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் 22-ந்தேதி கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்தில் துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் இறந்தனர். இது தொடர்பாக 249 வழக்குகளை போலீசார் பதிவு செய்தனர். இதில் 5 வழக்குகள் மட்டும் சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. பின்னர் ஐகோர்ட்டு உத்தரவுபடி மொத்தம் 207 வழக்குகளை ஒரே வழக்காக மாற்றி சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வந்தனர்.

    இந்நிலையில் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி கடந்த ஆகஸ்டு மாதம் 14-ந்தேதி ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஏற்கனவே உள்ள 5 வழக்கு தொடர்பாக திரட்டிய ஆவணங்களை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தனர். அதன்பேரில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.

    இதைத்தொடர்ந்து நேற்று 207 வழக்குகளின் ஆவணங்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தனர். இந்த வழக்கு ஆவணங்களை சி.பி.ஐ. அதிகாரிகள் சரிபார்த்து வருகின்றனர். #Thoothukudifiring
    Next Story
    ×