search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பனிப்பொழிவு அதிகரிப்பால் கம்பளி ஆடைகள் விற்பனை அமோகம்
    X

    பனிப்பொழிவு அதிகரிப்பால் கம்பளி ஆடைகள் விற்பனை அமோகம்

    பனிப்பொழிவு தொடங்கி விட்டதால் கம்பளி ஆடைகள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் டிசம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை பனிக் காலமாகும். ஆனால் நடப்பாண்டு முன்கூட்டியே நவம்பர் மாதம் இறுதியிலேயே பனிக்காலம் தொடங்கி விட்டது. மேலும் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவ்வப்போது லேசான மழை பெய்தது. ஆனால் பகல் நேரத்தில் வெயிலும் வாட்டி வதைக்கிறது. அப்படி இருந்தும் இரவு 9 மணிக்கு பிறகு பனிப்பொழிவு தொடங்கி விட்டதால் குழந்தைகள், சிறுவர்கள், முதியவர்கள், பெண்கள் என அனைத்து தரப்பினருமே கடுங்குளிரால் அவதிப்படுகின்றனர்.

    பனியின் காரணமாக பெரம்பலூர் புதிய பஸ் நிலையம், சங்குப்பேட்டை, பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் வியாபாரிகள் சாலையோரத்தில் தற்காலிக கடைகளில் ஸ்வட்டர், போர்வை, தலைக்குல்லா, ஸ்கார்ப் உள்ளிட்ட கம்பளி ஆடைகளை விற்பனைக்காக குவித்துள்ளனர். அதன் விற்பனையும் அமோகமாக நடைபெறுகிறது.

    இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், திருப்பூர், ஈரோட்டில் இருந்து மொத்தமாக போர்வை, ஸ்வட்டர், தலைக்குல்லா போன்றவைகளை கொள்முதல் செய்து வந்து சில்லரை விற்பனைக்கு வைத்துள்ளோம். நடப்பாண்டு முன்கூட்டியே குளிர் தொடங்கிவிட்டதால் ஸ்வட்டர், போர்வை, ஸ்கார்ப், குல்லா ஆகியவற்றை மக்கள் அதிகமாக வாங்கி செல்கின்றனர். ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் கடந்த ஆண்டை விட ஸ்வட்டர், போர்வையின் விலைகள் இந்த ஆண்டு அதிகரித்துள்ளது.

    இதில் தரத்தை பொறுத்து சிறுவர்களுக்கு ரூ.150-ல் இருந்து ரூ.300 வரையிலும், பெரியவர்களுக்கு ரூ.250 முதல் ரூ.450 வரையிலும் ஸ்வட்டர்கள் விற்பனைக்கு உள்ளன. ஸ்கார்ப் ரூ.30 முதல் ரூ.50 வரையிலும், தலைக்குல்லா சிறுவர்களுக்கு ரூ.20-ல் இருந்தும், பெரியவர்களுக்கு ரூ.30-ல் இருந்தும் உள்ளன. சால்வை ரூ.250 முதல் ரூ.400 வரையிலும், போர்வை ரூ.100 முதல் 300 வரையிலும் விற்பனை செய்து வருகிறோம் என்றார்.

    Next Story
    ×