search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரும்பார்த்தபுரத்தில் மருத்துவ மாணவி மாயம்- கடத்தப்பட்டாரா? போலீசார் விசாரணை
    X

    அரும்பார்த்தபுரத்தில் மருத்துவ மாணவி மாயம்- கடத்தப்பட்டாரா? போலீசார் விசாரணை

    அரும்பார்த்தபுரத்தில் மருத்துவ மாணவி மாயயமானார். அவர் கடத்தப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுவை அரும்பார்த்தபுரம் பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர் சக்கரபாணி, விவசாயி. இவரது மகள் ராஜஸ்ரீ (வயது19). இவர் பிலிப்பைன்ஸ் நாட்டில் தங்கி எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு படித்து வந்தார் கடந்த 7-ந்தேதி ராஜஸ்ரீ பெற்றோர் வீட்டுக்கு வந்திருந்தார். 8-ந்தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற ராஜஸ்ரீ அதன்பிறகு வீடுதிரும்பவில்லை.

    உறவினர்கள் மற்றும் தோழிகள் வீடுகள் உள்பட பல இடங்களில் தேடியும் எங்கும் ராஜஸ்ரீ இல்லை. இதையடுத்து சக்கரபாணி தனது மகள் மாயமானது குறித்து ரெட்டியார்பாளையம் போலீசில் புகார் செய்தார்.

    போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் இரிசப்பன் ஆகியோர் வழக்குபதிவு செய்து ராஜஸ்ரீயை யாராவது கடத்தி சென்றார்களா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    Next Story
    ×