search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போச்சம்பள்ளி பகுதிகளில் தொடர் பனிப்பொழிவு
    X

    போச்சம்பள்ளி பகுதிகளில் தொடர் பனிப்பொழிவு

    போச்சம்பள்ளி பகுதிகளில் தொடர் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் காலை 8 மணிவரை முகப்பு விளக்குகளை எரிய விட்டவாறு ஓட்டி செல்கின்றனர்.
    போச்சம்பள்ளி:

    கிருஷ்ணகிரி, தருமபுரி பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே தொடர் பனியாக உள்ளது. இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதிகளில் உள்ள அரசம்பட்டி, புலியூர், மஞ்சமேடு, பண்ணந்தூர், பாரூர், பாப்பானூர், உள்ளிட்ட பல பகுதிகளில் பனிப் பொழிவு ஏற்பட்டுள்ளது.

    எப்போதும் லேசன பனிப் பொழிவு ஏற்படும் இப்பகுதிகளில், தற்போது அதிகஅளவு பனிப் பொழிவு  நாலுக்கு நாள் உள்ளது. கடந்த 4 தினங்களாக தொடர் பனிப் பொழிவு வழக்கத்திரற்கு மாறாக ஏற்பட்டுள்ளது. வட மாநிலங்களில் மட்டுமே தொடர் பனிப் பொழிவு ஏற்படும் நிலையில், இப்பகுதிகளில் அதிகாலை முதலே பனிப் பொழிவால் வாகன ஓட்டிகள் ரோடு தெரியாமல் வாகனத்தை ஆமைபோல் இயக்குகின்றனர். காலை 8 மணிவரை முகப்பு விளக்கு எரிய விட்டவாறு ஓட்டி செல்கின்றனர். 

    மேலும், வீடுகளில் வைக்கப்பட்டுள்ள ரோஜா போன்ற பூக்கள் கருக தொடங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×