search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்செந்தூர் அருகே மின்சாரம் தாக்கி 2 மாடுகள் பலி
    X

    திருச்செந்தூர் அருகே மின்சாரம் தாக்கி 2 மாடுகள் பலி

    திருச்செந்தூர் அருகே மின்சாரம் தாக்கி 2 மாடுகள் பலியான சம்பவத்தையடுத்து புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் அருகே உள்ள ஆலந்தலையை சேர்ந்த ஞானமுத்து மனைவி பஞ்சவர்ணம் (வயது35). இவருக்கு சொந்தமாக 10 மாடுகள் உள்ளன. இந்த மாடுகளை காலையில் மேய்ச்சலுக்கு விட்டால் மாலையில் அவைகள் வீடு திரும்பி விடுமாம்.

    இந்நிலையில் கடந்த 6-ந் தேதி மேய்ச்சலுக்கு சென்ற மாடுகளில் 2 மாடுகள் மாலையில் வீடு திரும்பவில்லையாம். இதையடுத்து மறுநாள் ஆலந்தலை காட்டுப் பகுதியில் தேடி பார்த்தபோது இரண்டு மாடுகள் இறந்து கிடந்தது. இதன் அருகில் மின்கம்பி அறுந்து கிடந்துள்ளது. இதனால் மின்சாரம் தாக்கி இரண்டு மாடுகள் இறந்தது தெரியவந்தது.

    இது குறித்து பஞ்சவர்ணம் திருச்செந்தூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×