என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேலை வழங்க கோரி காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்தில் வாலிபர் தீக்குளிக்க முயற்சி
Byமாலை மலர்10 Dec 2018 9:44 AM GMT (Updated: 10 Dec 2018 9:44 AM GMT)
காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்தில் வேலை வழங்க கோரி வாலிபர் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சீபுரம்:
வாலாஜாபாத் அருகே உள்ள வாரணவாசி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜாராம். கிராம உதவியாளராக இருந்து ஓய்வு பெற்றவர். இவரது மகன் செல்வம் (36). இவர் தந்தை பார்த்த வேலையை தனக்கு வழங்கும்படி தாலுகா அலுவலகத்தில் மனு செய்து இருந்தார்.
பலமுறை முயற்சி செய்தும் செல்வத்துக்கு வேலை கிடைக்கவில்லை. கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தும் பயன் இல்லை. இதனால் மன வருத்தம் அடைந்தார்.
இன்று காலை காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்தில், பொதுமக்களிடம் கலெக்டர் பொன்னையா மனுக்களை பெற்றுக் கொண்டிருந்தார். அங்கு வந்த செல்வம் தன் மீது மண்எண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை கண்ட போலீசார் மற்றும் பொதுமக்கள் அவரை தீக்குளிக்க விடாமல் தடுத்தனர்.
தகவல் அறிந்ததும் கலெக்டர் பொன்னையா அங்கு வந்து செல்வத்தை சந்தித்து பேசினார். வேலை வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இதையடுத்து, செல்வம் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார். #tamilnews
வாலாஜாபாத் அருகே உள்ள வாரணவாசி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜாராம். கிராம உதவியாளராக இருந்து ஓய்வு பெற்றவர். இவரது மகன் செல்வம் (36). இவர் தந்தை பார்த்த வேலையை தனக்கு வழங்கும்படி தாலுகா அலுவலகத்தில் மனு செய்து இருந்தார்.
பலமுறை முயற்சி செய்தும் செல்வத்துக்கு வேலை கிடைக்கவில்லை. கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தும் பயன் இல்லை. இதனால் மன வருத்தம் அடைந்தார்.
இன்று காலை காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகத்தில், பொதுமக்களிடம் கலெக்டர் பொன்னையா மனுக்களை பெற்றுக் கொண்டிருந்தார். அங்கு வந்த செல்வம் தன் மீது மண்எண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை கண்ட போலீசார் மற்றும் பொதுமக்கள் அவரை தீக்குளிக்க விடாமல் தடுத்தனர்.
தகவல் அறிந்ததும் கலெக்டர் பொன்னையா அங்கு வந்து செல்வத்தை சந்தித்து பேசினார். வேலை வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இதையடுத்து, செல்வம் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X