search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வில்லியனூரில் அளவுக்கு அதிகமாக மாத்திரை தின்று பெண் தற்கொலை
    X

    வில்லியனூரில் அளவுக்கு அதிகமாக மாத்திரை தின்று பெண் தற்கொலை

    வில்லியனூரில் அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை தின்று பெண் தற்கொலை செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் பைபாஸ்ரோட்டில் வசித்து வருபவர் கமலரசன். இவர் புதுவை 100 அடி ரோட்டில் உள்ள தனியார் மோட்டார் சைக்கிள் ஷோரூமில் மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பூங்குழலி(வயது32). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். பூங்குழழி மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.

    இதற்கிடையே பூங்குழலி கால் வலியால் அவதி அடைந்து வந்தார். இதற்காக மருந்து, மாத்திரை சாப்பிட்டு வந்தும் கால்வலி குணமாகவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று பூங்குழலிக்கு கால்வலி அதிகமானதாக கூறப்படுகிறது. 

    இதனால் மனமுடைந்த பூங்குழலி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து வீட்டில் இருந்த மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக தின்று விட்டார். அதில் மயங்கி விழுந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பூங்குழழி பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்த புகாரின்பேரில் வில்லியனூர் உதவி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தணிகாசலம் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×