search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செங்குன்றம் பகுதியில் ஆடு திருடிய 2 வாலிபர்கள் கைது
    X

    செங்குன்றம் பகுதியில் ஆடு திருடிய 2 வாலிபர்கள் கைது

    செங்குன்றம் பகுதியில் ஆடு திருடிய 2 வாலிபர்களை கைது செய்த போலீசார் அவர்களை புழல் ஜெயிலில் அடைத்தனர்.
    செங்குன்றம்:

    செங்குன்றம் பம்மதுகுளம் அருகே செங்குன்றம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் ஆடு ஒன்றுடன் செங்குன்றத்தை நோக்கி வந்து கொண்டிருந்தனர். அவர்களிடம் விசாரித்தபோது, அவர்கள் சென்னை கொருக்குபேட்டையை சேர்ந்த டில்லிபாபு, சூர்யா என்பதும் இவர்கள் 2 பேரும் ஆடு திருடர்கள் என்பதும் தெரியவந்தது. செங்குன்றம் போலீசார் அவர்களை புழல் ஜெயிலில் அடைத்தனர்.

    இதுவரை இவர்கள் செங்குன்றம் மற்றும் செங்குன்றம் சுற்று வட்டார பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட ஆடுகளை திருடியவர்கள் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    Next Story
    ×