search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மோட்டார் சைக்கிளில் சென்ற தொழிலாளி பள்ளத்தில் விழுந்து பலி
    X

    மோட்டார் சைக்கிளில் சென்ற தொழிலாளி பள்ளத்தில் விழுந்து பலி

    கோபி அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற தொழிலாளி பள்ளத்தில் விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    கோபி:

    கோபி அடுத்த கரட்டூர் மேடு அத்தாணியை சேர்ந்தவர் முத்துசாமி(வயது 42) கட்டிடத் தொழிலாளி. இவர் நேற்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் அரசூர்-நம்பியூர் ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது திடீரென நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளுடன் ரோட்டரோம் உள்ள பள்ளத்தில் தவறி விழுந்தார். அந்த பள்ளத்தில் தண்ணீர் சென்று கொண்டிருந்தது.

    இதில் முத்துசாமி சம்பவ இடத்திலேயே தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

    இது பற்றி தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்துக்கு போலீசார் சென்று, முத்துசாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

    மேலும் இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரனை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×