search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செல்போன் பறிப்பில் ஈடுபட்ட சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது
    X

    செல்போன் பறிப்பில் ஈடுபட்ட சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது

    கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறிப்பில் ஈடுபட்ட சிறுவர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

    போரூர்:

    சூளைமேடு திருவள்ளுவர் புரத்தைச் சேர்ந்தவர் அஸ்வக் மொகைதீன். போஸ்டர் ஒட்டும் தொழிலாளி. இவர் நள்ளிரவு நெல்சன் மாணிக்கம் சாலையில் போஸ்டர் ஒட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கும்பல் கத்தியை காட்டி மிரட்டி அஸ்வக்கிடம் இருந்து செல்போனை பறித்து தப்பி சென்றனர்.

    இதுகுறித்து அமைந்தகரை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு அரும்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் 4 பேரையும் மடக்கி பிடித்தனர்.

    அவர்கள் நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன், வினோத் மற்றும் 18 வயதுக்கு உட்பட்ட 2 சிறுவர்கள் என்பது தெரிந்தது. பல்வேறு இடங்களில் அவர்கள் செல்போன் மற்றும் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள், கத்தி, 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    Next Story
    ×