என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அம்பத்தூர் போலீஸ் நிலையம் முன்பு ரூ. 5 லட்சம் கொள்ளை
Byமாலை மலர்7 Dec 2018 9:40 AM GMT (Updated: 7 Dec 2018 9:40 AM GMT)
அம்பத்தூர் போலீஸ் நிலையம் முன்பு மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து ரூ. 5 லட்சம் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
அம்பத்தூர்:
அம்பத்தூர் வெங்கடாபுரம் டோபி காலனியை சேர்ந்தவர் அரி (வயது 39). இவர் அடையாளம்பட்டு ஊராட்சியில் துப்புரவு பணியாளர்களுக்கு மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார்.
நேற்று மாலை இவர் சீட்டு நடத்திய பணம் ரூ. 5 லட்சத்தை அம்பத்தூரில் உள்ள ஒரு வங்கியில் செலுத்த டோக்கன் வாங்கி வரிசையில் நின்றார்.
அப்போது அம்பத்தூர் போலீஸ் நிலையத்தையொட்டி உள்ள வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து வேலை விஷயமாக அவரை போனில் அழைத்தனர்.
உடனே அரி மோட்டார் சைக்கிளில் அங்கு சென்றார். அம்பத்தூர் போலீஸ் நிலையம் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி அதிலிருந்த பெட்டியில் ரூ. 5 லட்சத்தை வைத்துவிட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு சென்றார்.
சிறிது நேரத்தில் திரும்பி வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிள் பெட்டி உடைக்கப்பட்டு ரூ. 5 லட்சம் கொள்ளை போயிருந்தது தெரிந்தது.
இதுபற்றி அவர் அம்பத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீஸ் நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளையர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
அம்பத்தூர் வெங்கடாபுரம் டோபி காலனியை சேர்ந்தவர் அரி (வயது 39). இவர் அடையாளம்பட்டு ஊராட்சியில் துப்புரவு பணியாளர்களுக்கு மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார்.
நேற்று மாலை இவர் சீட்டு நடத்திய பணம் ரூ. 5 லட்சத்தை அம்பத்தூரில் உள்ள ஒரு வங்கியில் செலுத்த டோக்கன் வாங்கி வரிசையில் நின்றார்.
அப்போது அம்பத்தூர் போலீஸ் நிலையத்தையொட்டி உள்ள வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து வேலை விஷயமாக அவரை போனில் அழைத்தனர்.
உடனே அரி மோட்டார் சைக்கிளில் அங்கு சென்றார். அம்பத்தூர் போலீஸ் நிலையம் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி அதிலிருந்த பெட்டியில் ரூ. 5 லட்சத்தை வைத்துவிட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு சென்றார்.
சிறிது நேரத்தில் திரும்பி வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிள் பெட்டி உடைக்கப்பட்டு ரூ. 5 லட்சம் கொள்ளை போயிருந்தது தெரிந்தது.
இதுபற்றி அவர் அம்பத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீஸ் நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளையர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X