search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரோட்டில் மாவட்டஅளவிலான அறிவியல் கண்காட்சி
    X

    ஈரோட்டில் மாவட்டஅளவிலான அறிவியல் கண்காட்சி

    ஈரோட்டில் நடந்த மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் 267 மாணவ- மாணவிகள் கலந்துகொண்டனர்.
    ஈரோடு:

    பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஈரோடு மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி ஈரோடு அரசு மகளிர் மேல்நிலை பள்ளிக்கூடத்தில் நேற்று நடைபெற்றது.

    இந்த கண்காட்சி ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்காக நடத்தப்பட்டது. இதில் உணவு, பொருட்கள், உலகில் உள்ள உயிரினங்கள், நகரும் பொருட்களும் பொதுமக்களும், வேலை, இயற்கை ஆதாரங்கள், இயற்கை நிகழ்வுகள், கணிதம் ஆகிய 8 தலைப்புகளில் கண்காட்சி நடந்தது.

    இந்த கண்காட்சியில் 112 அரசு பள்ளிக்கூடங்களில் படிக்கும் மொத்தம் 267 மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு தங்களது படைப்புகளை வைத்திருந்தனர். அதில் சிறந்த கண்டுபிடிப்புகளை நடுவர் குழுவினர் தேர்வு செய்தனர்.

    ஒவ்வொரு பிரிவுகளின் கீழ் முதல் 3 சிறந்த கண்டுபிடிப்புகள் தேர்வு செய்யப்பட்டன. அதில் முதல் பரிசாக தலா ரூ.1,500, 2-வது பரிசாக தலா ரூ.1,000, 3-வது பரிசாக தலா ரூ.500 என மொத்தம் 24 மாணவ-மாணவிகளுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

    இதேபோல் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாவட்ட அளவிலான வினாடி- வினா போட்டி ஈரோடு அரசு மகளிர் மேல்நிலை பள்ளிக்கூடத்தில் நடைபெற்றது. இதில் முதல் இடம் பெற்ற மாணவ- மாணவிகள் கோவை மண்டல அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றனர்.
    Next Story
    ×