search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாலை விபத்துகளை தடுக்க ரூ.30 லட்சத்தில் திட்ட பணிகள் - கலந்தாய்வு கூட்டத்தில் தகவல்
    X

    சாலை விபத்துகளை தடுக்க ரூ.30 லட்சத்தில் திட்ட பணிகள் - கலந்தாய்வு கூட்டத்தில் தகவல்

    அரியலூர் மாவட்டத்தில் சாலை விபத்துகளை தடுக்க ரூ.30 லட்சத்தில் திட்ட பணிகள் செய்யப்பட உள்ளது என்று கலந்தாய்வு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு மற்றும் விபத்துகளை தடுப்பது தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் போலீஸ் துணை சூப்பிரண்டுகள், அரியலூர் வட்டார போக்குவரத்து அதிகாரிகள், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், தேசிய, மாநில, மாவட்ட நெடுஞ்சாலைகள் மற்றும் கிராமபுற சாலைகள் தொடர்பான உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    அரியலூர் மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு, விபத்துகளை தடுப்பது தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் சிமெண்டு நிறுவன அதிகாரிகளும் கலந்து கொண்டனர். மேலும் ராம்கோ சிமெண்டு நிறுவனத்தினர் செந்துறை ரவுண்டானாவில் இருந்து ஓட்டக்கோவில் வரை சாலையில் முகப்பு குவி கண்ணாடி வைத்தல், உயர்கோபுர மின் விளக்குகள் அமைத்தல், எச்சரிக்கை பலகை வைத்தல் உள்ளிட்ட திட்ட பணிகளுக்காக ரூ.30 லட்சம் செலவு செய்வதாக கூட்டத்தில் தெரிவித்தனர். மற்ற தனியார் சிமெண்டு நிறுவனத்தினர் சாலை விபத்தை தடுக்க தடுப்பு அரண்கள், தகுந்த ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டி தர கூட்டத்தில் சம்மதித்தனர்.

    பின்னர் விபத்து தடுப்பு மற்றும் சாலை பாதுகாப்பு தொடர்பாக செந்துறை பைபாஸ் சாலையில் கண் கூசும் விளக்குகள் எரியும் வாகனங்களுக்கு முகப்பு விளக்கில் போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் கருப்பு வில்லை ஒட்டியும், வாகன ஓட்டிகளுக்கு அறிவுரையும் வழங்கினார். 
    Next Story
    ×