search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவாரூரில் ஆற்றில் மூழ்கி தொழிலாளி பலி
    X

    திருவாரூரில் ஆற்றில் மூழ்கி தொழிலாளி பலி

    திருவாரூரில் நண்பருடன் ஆற்றில் குளித்த தொழிலாளி நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
    திருவாரூர்:

    திருச்சி, அரியமங்கலம் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 38). இவரது நண்பர் பொன்மலையை சேர்ந்த செந்தில்குமார் (38). தொழிலார்கள்.இவர்கள் லாரியில் நேற்று திருவாரூர் வந்தனர். அங்கு விளமலில் உள்ள ஓடம்போக்கி ஆற்றில் இருவரும் குளித்தனர். ஆற்றில் சேறு அதிகமாக இருந்ததால் அதில் சிக்கி செல்வம் பலியாகி விட்டார். இதுபற்றி திருவாரூர் டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. 

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் குலோத்துங்கன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆற்றில் மூழ்கி பலியான செல்வம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    Next Story
    ×