search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெண்ணிடம் நகை பறித்த 2 வாலிபர்கள் கைது
    X

    பெண்ணிடம் நகை பறித்த 2 வாலிபர்கள் கைது

    விருதுநகர் அருகே பெண்ணிடம் நகை பறித்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விருதுநகர்:

    விருதுநகர் அருகே உள்ள ஆணைக்குட்டத்தை சேர்ந்தவர் ஜெயலட்சுமி(வயது 43). மாற்றுத்திறனாளியான இவர் சம்பவத்தன்று அதே பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள் ஜெயலட்சுமியை தாக்கி அவரது கழுத்தில் கிடந்த 2 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பினர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.

    சம்பவத்தன்று போலீசார் ரோந்து சென்றனர். அப்போது ராஜபாளையம் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக 2 பேர் நின்றிருந்தனர். அவர்களிடம் விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பேசினர். இதனால் அவர்கள் மீது சந்தேகம் வலுத்தது.

    இதையடுத்து போலீசார் 2 பேரிடமும் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்திய போது அவர்கள் மதுரை தோப்பூரை சேர்ந்த சசிகுமார்(22), திருநகர் 3-வது ஸ்டாப்பை சேர்ந்த அழகுராஜா(21) எனவும், இவர்கள் ஜெயலட்சுமியிடம் நகையை பறித்தது தெரியவந்தது. 2 பேரையும் ஆமத்தூர் போலீசார் கைது செய்தனர். #tamilnews
    Next Story
    ×