search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரூ.41 லட்சத்தில் 137 பேருக்கு நலத்திட்ட உதவிகள் - கலெக்டர் விஜயலட்சுமி வழங்கினார்
    X

    ரூ.41 லட்சத்தில் 137 பேருக்கு நலத்திட்ட உதவிகள் - கலெக்டர் விஜயலட்சுமி வழங்கினார்

    ரூ.41 லட்சத்தில் 137 பேருக்கு மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
    அரியலூர்:

    அரியலூரில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா நடந்தது. விழாவிற்கு அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். ராமஜெயலிங்கம் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். விழாவில் 45 மாற்றுத்திறனாளிகளுக்கு விலையில்லா இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களையும், 40 பேருக்கு விலையில்லா மோட்டார் பொருத்திய தையல் எந்திரங்களையும், 2 பேருக்கு மூன்று சக்கர சைக்கிள்களையும், 2 பேருக்கு மடக்கு சக்கர நாற்காலிகளையும், 2 பேருக்கு சிறப்பு சக்கர நாற்காலிகளையும், 5 பேருக்கு கைக்கடிகாரம் மற்றும் கருப்பு கண்ணாடிகளையும், 22 பேருக்கு காதுக்கு பின்புறம் அணியும் காதொலிக்கருவிகளையும், 29 பேருக்கு திருமண உதவித்தொகைக்கான காசோலைகளையும் என மொத்தம் 137 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.41 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் விஜயலட்சுமி வழங்கினார்.

    முன்னதாக சிறப்பாக பணியாற்றிய அரியலூர் அரசு தலைமை மருத்துவமனை முட நீக்கியியல் டாக்டர்கள் கொளஞ்சிநாதன், மணிகண்டன், பிரவீன் ஆகியோரை பாராட்டி, நற்சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார். பின்னர் ஹெலன் ஹெல்லர் காது கேளாதவர் பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அதிகாரி (பொறுப்பு) காமாட்சி, திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி முகமை) (பொறுப்பு) லலிதா, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி புகழேந்தி, துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பூங்கோதை, மாவட்ட தொழில் மைய அலுவலர் சகுந்தலா, முடநீக்கு வல்லுனர் ராமன், கொல்லாபுரம் ஹெலன்ஹெல்லர் காதுகேளாதோர்க்கான சிறப்பு பள்ளி சகோதரி லில்லிகேத்ரின் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்கள், சிறப்பு பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். 
    Next Story
    ×