search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓய்வு பெற்ற அரசு அதிகாரி வீட்டில் 15 பவுன் நகை கொள்ளை
    X

    ஓய்வு பெற்ற அரசு அதிகாரி வீட்டில் 15 பவுன் நகை கொள்ளை

    சிங்கம் புணரியில் உள்ள ஓய்வு பெற்ற அரசு அதிகாரி வீட்டில் 15 பவுன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்
    சிங்கம்புணரி:

    சிங்கம்புணரி கீழக்காட்டு சாலை பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 78). ஓய்வு பெற்ற அரசு வட்டார வளர்ச்சி அதிகாரியான இவரின் மகன்கள், மகள்கள் திருமணமாகி வெளியூர் சென்றுவிட்டனர். இந்தநிலையில் மனைவி ஆறுமுகத்தம்மாளுடன் அதிகாரி தனியாக வசித்து வந்தார். தற்போது இவரின் 2-வது மகன் பாண்டியராஜன் மாடி வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

    இந்நிலையில் உடல் நிலை பாதிக்கப்பட்ட சுப்பிரமணியன், தனது மனைவியுடன் மதுரையில் சிகிச்சை பெற சென்றார். இதைநோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த பீரோவில் 15 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டனராம்.

    மறுநாள் காலை பாண்டியராஜன் எழுந்த பார்த்த போது, கீழே உள்ள தந்தை வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு திடுக்கிட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் சிங்கம்புணரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா, சப்-இன்ஸ்பெக்டர்கள் கோடீஸ்வரன், சந்திரசேகன் உள்ளிட்ட போலீசார் கொள்ளை நடந்த வீட்டிற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    மேலும் கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். கீழக்காட்டு சாலை சிங்கம்புணரி பிரதான சாலைகளில் முக்கியமானது. இங்கு அரசுப் பள்ளிகள், அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள், ஆன்மிக இடங்கள், பெண்கள் விடுதி போன்றவை உள்ளன.

    இதனால் இந்த சாலையில் எந்நேரமும் பொதுமக்கள் நடமாட்டம் இருந்து வருகிறது. தொடர்ந்து இரவு, பகல் என போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    Next Story
    ×