என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கிருஷ்ணகிரி அருகே சாலை விபத்தில் தொழில் அதிபர் பலி
Byமாலை மலர்5 Dec 2018 4:56 PM GMT (Updated: 5 Dec 2018 4:56 PM GMT)
கிருஷ்ணகிரி அருகே சாலை விபத்தில் ஆந்திராவை சேர்ந்த தொழில் அதிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி:
ஆந்திரா மாநிலம், சித்தூர் மாவட்டம், பலமனேரி காலுப்பள்ளி பகுதியை சேர்ந்த தொழில் அதிபர் வனசஸானா(63). இவர் செங்கல் பேக்கடரி தொழில் நடத்தி வருகிறார். இவரது மனைவி கலாவதி. இந்த நிலையில் இவர்கள் தங்களது காரில் டிரைவர் அஞ்சவர்தனுடன் பெங்களுரில் உள்ள தங்களது மகள் பிரியங்காவை பார்த்து விட்டு பின்னர் தங்களது ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அவர்கள் கிருஷ்ணகிரி காட்டி நாயனப்பள்ளி அருகே உள்ள கிருஷ்ணகிரி-குப்பம் நெடுஞ்சாலையில் இவர்கள் சென்ற கார் முன்னால் சென்ற வாகனம் மீது எதிர்பாரதவிதமாக மோதி விபத்துக்குள்ளனது.
இதில் பலத்த காயமடைந்த வனசஸானா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். கலாவதி லேசான காயத்துடன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார். மேலும் இந்த விபத்து குறித்து மகாராஜகடை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X