search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலி பாஸ்போர்ட்டில் வெளிநாடு செல்ல முயன்றவர் கைது
    X

    போலி பாஸ்போர்ட்டில் வெளிநாடு செல்ல முயன்றவர் கைது

    போலி பாஸ்போர்ட்டில் வெளிநாடு செல்ல முயன்றவர் திருச்சி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். #trichyairport
    கே.கே.நகர்:

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பூ கொல்லை பகுதியைச் சேர்ந்தவர் தங்கமணி. இவர் வெளிநாடு செல்வதற்காக தனது பாஸ்போர்ட்டில் திருத்தம் செய்து, நேற்று இரவு மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு புறப்பட தயாராக இருந்த ஏர் ஏசியா விமானத்தில் செல்ல  இருந்தார். 

    அப்போது தங்கமணியை சோதனை செய்த இமி கிரேஷன் பிரிவு அதிகாரிகள் அவர் பாஸ்போர்ட்டில் திருத்தம் செய்து இருப்பதை  கண்டு பிடித்தனர்.

    இதனைத் தொடர்ந்து தங்கமணியை ஏர்போர்ட் போலீசார் கைது செய்தனர். இது குறித்து வழக்குப்பதிந்து தங்கமணியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். #trichyairport
    Next Story
    ×