search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வில்லியனூரில் பஸ் மோதி கூலித்தொழிலாளி பலி
    X

    வில்லியனூரில் பஸ் மோதி கூலித்தொழிலாளி பலி

    வில்லியனூரில் ரோட்டை கடக்க முயன்ற கூலித் தொழிலாளி மீது பஸ் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் இறந்து போனார்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் ஆரியப்பாளையம் பேட் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் புலி என்ற முத்தையன் (வயது 54). கூலித்தொழிலாளி. இவரது மனைவி சுதா. இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

    நேற்று மாலை முத்தையன் வில்லியனூர்- ஆரியப்பாளையம் மெயின் ரோட்டை கடக்க முயன்ற போது, புதுவையில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற தனியார் பஸ் எதிர்பாராத விதமாக முத்தையன் மீது மோதியது.

    இதில், முத்தையன் தலை மீது பஸ் ஏறியதால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்து வில்லியனூர் போக்குவரத்து சப்-இன்ஸ் பெக்டர் புனிதராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×