search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலம் அருகே ரெயில் மோதி எலக்ட்ரீசியன் பலி
    X

    சேலம் அருகே ரெயில் மோதி எலக்ட்ரீசியன் பலி

    சேலம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற எலக்ட்ரீசியன் மீது ரெயில் மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள பெரியகவுண்டம்பட்டியை சேர்ந்தவர் மணிமாறன் (வயது 49). எலக்ட்ரீசியனான இவர் அயோத்தியாப்பட்டினம் அருகே உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் கடந்த சில நாட்களாக ஒப்பந்த பணியில் ஈடுபட்டு வந்தார்.

    இந்த நிலையில் இன்று காலை வீட்டில் இருந்து பணிக்கு சென்ற அவர் அயோத்தியப்பட்டணம் பகுதியில் உள்ள தண்டவாளத்தைக் கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக சென்ற சேலம்-விருத்தாச்சலம் ரெயில் அவர் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் இறந்த மணிமாறனுக்கு வளர்மதி என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர்.

    Next Story
    ×