search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒரத்தநாட்டில் மதுபானம் பதுக்கி விற்ற பெண் உள்பட 4 பேர் கைது
    X

    ஒரத்தநாட்டில் மதுபானம் பதுக்கி விற்ற பெண் உள்பட 4 பேர் கைது

    ஒரத்தநாட்டில் மதுபானம் பதுக்கி விற்ற பெண் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 10 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    ஒரத்தநாடு:

    தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் கஜா புயலால் பெரும் சேதம் ஏற்பட்டது. இதையொட்டி அங்கு செயல்பட்ட டாஸ்மாக் கடைகள் கடந்த 18 நாட்களாக மூடப்பட்டு உள்ளன. இந்த நிலையில் ஒரத்தநாடு பகுதியில் கடைகளில் பதுக்கி மது விற்பனை நடைபெறுவதாக புகார் எழுந்தது. 

    இதைத் தொடர்ந்து பட்டுக்கோட்டை மது விலக்குப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ஒரத்தநாடு மன்னை முக்கம் பகுதியில் டீக்கடை சின்னையன் (வயது 58), டிபன் சென்டர் சுகுமார் (40), அண்ணாநகர் அலமேலு (45) ஆகியோர் மதுபாட்டில்களை பதுக்கி விற்பது தெரியவந்தது.

    அவர்களை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 45 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் சப்-இன்ஸ்பெக்டர் அமிர்த லிங்கம் தலைமையில் போலீசார் சோதனை நடத்தி தென்னமநாடு மாரியப்பன் கோவில் சசிகுமார் (40) என்பவரையும் கைது செய்து அவரிடம் இருந்து 10 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×