search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புறநகர் பகுதியில் பலத்தமழை - சென்னை குடிநீர் ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு
    X

    புறநகர் பகுதியில் பலத்தமழை - சென்னை குடிநீர் ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு

    தொடர் மழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம், புழல் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. #PuzhalLake
    திருவள்ளூர்:

    வங்கக்கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்தம் காரணமாக நேற்று முன்தினம் மாலை முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    சென்னையில் இன்று காலையும் பரவலாக மழை பெய்தது. புறநகர் பகுதியான ஆவடி, அம்பத்தூர், புழல், சோழவரம் உள்ளிட்ட பகுதிகளில் விட்டு விட்டு கனமழை கொட்டியது.

    திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. பழவேற்காடு, மீஞ்சூர், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, புழல், பூந்தமல்லி உள்ளிட்ட இடங்களிலும் பலத்த மழைபெய்தது. ஊத்துக்கோட்டையில் நேற்று மாலையில் தொடங்கிய மழை நள்ளிரவு வரை நீடித்தது. இதனால் தாழ்வான இடங்களில் வெள்ளம் தேங்கியது.

    தொடர் மழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம், புழல் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

    செம்பரம்பாக்கம் ஏரி நீர்ப்பிடிப்பு பகுதியில் போதிய மழை இல்லாததால் எதிர்பார்த்த நீர் வரத்து இல்லை.இந்த 4 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 257 மில்லியன் கனஅடி நீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி மொத்தம் 1,704 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது.

    கடந்த 3-ந் தேதி 4 ஏரிகளையும் சேர்த்து 1,681 மில்லியன் கனஅடி தண்ணீர் இருந்தது. கடந்த 2 நாட்களில் 23 மில்லியன் கனஅடி நீர் அதிகரித்து உள்ளது.  #PuzhalLake

    Next Story
    ×