search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது
    X

    புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் கைது

    புகையிலை பொருட்களை பதுக்கி விற்பனை செய்த வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்
    தர்மபுரி:

    தர்மபுரி டவுன் பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை சிலர் கடைகளில் பதுக்கி விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது புகையிலை பொருட்களை பதுக்கி விற்பனை செய்த குமார், மணிகண்டன் ஆகிய 2 பேர் சிக்கினார்கள்.

    இதேபோல் மதிகோன்பாளையம் பகுதியில் புகையிலை பொருட்களை பதுக்கி விற்பனை செய்த சரவணன் என்பவர் சிக்கினார். இவர்கள் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×