search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    களக்காடு, ஆறுமுகநேரியில் இளம்பெண்- 2 தொழிலாளிகள் தற்கொலை
    X

    களக்காடு, ஆறுமுகநேரியில் இளம்பெண்- 2 தொழிலாளிகள் தற்கொலை

    களக்காடு மற்றும் ஆறுமுகநேரியில் இளம்பெண் உள்பட 2 தொழிலாளிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள காடுவெட்டியை சேர்ந்தவர் முத்துராஜ். விவசாயி. இவரது மகள் ராதா (வயது 19). இவர் 12-ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். இவர் அடிக்கடி மடிக்கணினியை பார்த்து வந்துள்ளார். இதனை அவரது பெற்றோர் கண்டித்து வந்துள்ளனர்.

    இந்நிலையில் சம்பவத்தன்று ராதா தனது மடிக்கணினியை பார்த்துள்ளார். அப்போது அவரது பெற்றோர் வீட்டு வேலை செய்யாமல் மடிக்கணினியை பார்த்துக் கொண்டு இருக்கிறீயே? என சத்தம்போட்டுள்ளனர்.

    இதில் மனமுடைந்த ராதா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வி‌ஷத்தை குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தார். உடனடியாக அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று மாலை ராதா பரிதாபமாக உயிரிழந்தார்.

    பணகுடி அருகே உள்ள கோவில்விளையை சேர்ந்தவர் குணா (வயது 45). இவரது மனைவி செல்வம். குணாவிற்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இவரது மனைவி செல்வம் பிரிந்து சென்றுவிட்டார்.

    இந்நிலையில் கடந்த 2-ந் தேதி களக்காடு பழைய பேருந்து நிலையம் அருகே குணா வி‌ஷத்தை குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தார். இவரை மீட்டு நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த சம்பவங்கள் குறித்து களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஏரல் அருகே உள்ள இடையர்காட்டை சேர்ந்தவர் நயினார். இவரது மகன் நயினார் செல்வம் (வயது 26). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணகாகவில்லை. இவர் கடந்த சில மாதங்களாக சரியாக வேலை செல்லாமல் இருந்துள்ளார். இதனை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர்.

    இதில் மனமுடைந்த காணப்பட்ட அவர் கடந்த 27-ந் தேதி முக்காணி நேதாஜி தெருவில் உள்ள பாட்டி வீட்டிற்கு சென்றார். இங்கு வைத்து அவர் வி‌ஷத்தை குடித்துவிட்டார். அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    Next Story
    ×