search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மணல் ஏற்றி வந்த மாட்டு வண்டிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்
    X

    மணல் ஏற்றி வந்த மாட்டு வண்டிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்

    சேந்தமங்கலம் பொதுமக்கள் மணல் ஏற்றி வந்த மாட்டு வண்டிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள ஆலத்தியூர் பகுதியில் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளும் குவாரி இயங்கி வருகிறது. வெள்ளாற்றில் இருந்து மணல் அள்ளும் மாட்டு வண்டிகள் அங்கே இயங்கி வரும் தனியார் சிமெண்டு ஆலை பகுதி வழியாக வந்து கொண்டு இருந்தது. இதனால் தங்களது லாரிகளை இயக்க சிரமம் ஏற்படுவதாக ஆலை நிர்வாகத்தினர் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் மனு கொடுத்தனர்.

    இந்த நிலையில் மாவட்ட கனிமவளத்துறை அதிகாரிகள் மாட்டு வண்டிகளை சேந்தமங்கலம் கிராமம் வழியாக செல்ல வலியுறுத்தினர். இந்த நிலையில் சேந்தமங்கலம் பொதுமக்கள் மணல் ஏற்றி வந்த மாட்டு வண்டிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு சென்ற தளவாய் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சரத்குமார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அப்போது இந்த பிரச்சினை குறித்து செந்துறை தாசில்தார் முன்னிலையில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி முடிவு காணலாம் என்று கூறியதன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். #tamilnews
    Next Story
    ×