search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வடமாநில பெண்ணை ஆட்டோவில் கடத்தி 4 பேர் கும்பல் பாலியல் தொல்லை
    X

    வடமாநில பெண்ணை ஆட்டோவில் கடத்தி 4 பேர் கும்பல் பாலியல் தொல்லை

    கும்பகோணத்திற்கு வங்கி பணி பயிற்சிக்காக வந்த வடமாநில பெண்ணை ஆட்டோவில் கடத்தி 4 பேர் கொண்ட கும்பல் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள ஒரு வங்கியில் பயிற்சி பணிக்காக வடமாநிலத்தை சேர்ந்த 23 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் நேற்று முன்தினம் நள்ளிரவு கும்பகோணம் வந்தார்.

    ஏற்கனவே டெல்லியில் இந்த வங்கியின் தலைமை அலுவலகத்தில் வேலை பார்த்து வந்த அந்த பெண் உயர்பதவி பயிற்சிக்காக கும்பகோணத்தில் உள்ள வங்கிக்கு பயிற்சிக்கு வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் ரெயிலில் வந்த அந்த இளம் பெண் நேற்று முன்தினம் நள்ளிரவு கும்பகோணம் ரெயில் நிலையத்தில் இறங்கினார். பின்னர் தான் செல்ல வேண்டிய ஓட்டலுக்கு செல்ல ஒரு ஆட்டோவில் ஏறி அந்த ஓட்டலுக்கு செல்லுமாறு அந்த ஆட்டோ டிரைவரிடம் கூறியுள்ளார்.

    அந்த இளம்பெண் அரை குறை ஆடை அணிந்த நிலையில் தனியாக வந்துள்ளதால் அந்த ஆட்டோ டிரைவரின் மனதில் சபலபுத்தி ஏற்பட்டது. இதனால் இளம்பெண்ணை எப்படியாவது கடத்தி கொண்டு போய் அடைய வேண்டும் என்று முடிவு செய்தார்.

    பின்னர் அந்த பெண்ணை தனது ஆட்டோவில் ஏற்றி கொண்டு கும்பகோணம் நகரத்தை சுமார் 1 மணி நேரமாக சுத்தி சுத்தி வந்துள்ளார். ஆனால் அந்த பெண் கூறிய ஓட்டலுக்கு போகவில்லை. மேலும் ஆட்டோ டிரைவர் தனது நண்பர்கள் 3 பேருக்கு போன் செய்து தனியாக ஒரு வடமாநில பெண் சிக்கியுள்ளார் என்ற தகவலையும் தெரிவித்தார்.

    இதைத் தொடர்ந்து ஆட்டோ டிரைவரின் நண்பர்கள் 3 பேர், 2 மோட்டார் சைக்கிளில் ஆட்டோவை பின் தொடர்ந்து சென்றுள்ளனர்.

    இந்த நிலையில் தமிழ் தெரியாத அந்த இளம்பெண்ணுக்கு ஆட்டோ டிரைவர் தன்னை ஏமாற்றி அழைத்து செல்வதாக சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் ஆட்டோவை நிறுத்துமாறு கூறியுள்ளார்.

    ஆனால் அந்த டிரைவர் ஆட்டோவை நிறுத்தாமல் வேகமாக ஓட்டி சென்றுள்ளளார். ஒரு கட்டத்தில் அந்த பெண் ஆட்டோவில் இருந்து கீழே குதித்துள்ளார். அப்போது அந்த பெண்ணுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் ஆட்டோவின் பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த நண்பர்கள் அந்த பெண்ணை மீண்டும் வலுக்கட்டாயமாக ஆட்டோவில் ஏற்றி கொண்டு ஒரு மறைவான இடத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

    அங்கு சென்ற 4 பேரும் அந்த இளம் பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். மேலும் அந்த பெண்ணின் ஆடைகளை களைந்து தங்களது செல்போனில் ஆபாசமாக படம் பிடித்துள்ளனர்.

    இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண் அவர்களிடம் இருந்து தப்பித்து எங்கு செல்வது என்று தெரியாமல் மீண்டும் ரெயில்வே நிலையத்திற்கு சென்றுள்ளார். பின்னர் நடந்த சம்பவம் குறித்து ரெயில்வே போலீசில் கூறியுள்ளார்.

    இதை கேட்ட ரெயில்வே போலீசார் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அந்த பெண் காயமடைந்ததை அறிந்து அவரை கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் போலீசார் சேர்த்தனர். உடனே இது குறித்து சம்மந்தப்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன் பேரில் போலீசார் வடமாநில இளம்பெண்ணை கடத்தி சென்ற ஆட்டோ டிரைவர் யார்? எந்த இடத்திற்கு அழைத்து சென்றார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா மூலமாக அந்த பெண் எந்த ஆட்டோவில் சென்றார் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வங்கி பயிற்சி பணிக்காக வந்த வடமாநில பெண்ணை ஆட்டோவில் கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    Next Story
    ×