என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேலூர் போலீஸ் நிலையத்தில் விஷம் குடித்த இளம்பெண்- காதல் கணவர் மீது பரபரப்பு புகார்
Byமாலை மலர்4 Dec 2018 11:53 AM GMT (Updated: 4 Dec 2018 11:53 AM GMT)
காதல் கணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, வேலூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் விஷம் குடித்துத் தற்கொலைக்கு முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர்:
அரக்கோணம் இஞ்சிபுத்தூர் அன்னை அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர் சசிகலா (வயது 33). வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு வந்த அவர் போலீசாரிடம், எனது கணவர் என்னை தொந்தரவு செய்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
போலீசார் விசாரித்துக் கொண்டிருந்தபோது, சசிகலா திடீரெனத் தான் கையில் மறைத்து வந்திருந்த விஷத்தை எடுத்துக் குடித்து, தற்கொலைக்கு முயன்றார். இதைப்பார்த்த போலீசாரும், சசிகலாவின் சகோதரரும் ஓடி வந்து விஷ பாட்டிலை தட்டி விட்டனர்.
போலீசார், சசிகலா வைத்திருந்த மனுவை வாங்கி கொண்டனர். அவரை, அருகில் உள்ள பென்லேண்ட் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளித்து, பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
எனது கணவர் பெயர் குமார். கஸ்பாவில் வசிக்கிறார். நாங்கள் காதலித்துத் திருமணம் செய்து கொண்டோம். அவருக்கு, குடிப்பழக்கம் உண்டு. அடிக்கடி மதுபானம் குடித்து விட்டு வந்து, என்னிடம் தகராறு செய்வார். நான் பல நாட்கள் பொறுமையாக இருந்தேன். எனினும் அவர் எல்லை மீறி பல தொந்தரவுகளை செய்தார். நான் எனது தாய் வீட்டுக்குச் சென்று விட்டேன். கணவரை பிரிந்து 6 மாதங்கள் ஆகின்றன. தொலைபேசியில் தொடர்பு கொண்டு என்னை மிரட்டுகிறார்.
எனது பெற்றோரையும் அவர் தகாத வார்த்தைகளால் பேசினார். மேலும் அவரது நண்பர்களிடம் எனது செல்போன் எண்ணை கொடுத்து, ஆபாசமாக பேசுமாறு தூண்டி விடுகிறார். அவர்களும் ஆபாசமாக பேசுகிறார்கள். இதுகுறித்து போலீசில் புகார் செய்தால், என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார். கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சசிகலாவின் கணவர் குமாரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
அரக்கோணம் இஞ்சிபுத்தூர் அன்னை அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர் சசிகலா (வயது 33). வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு வந்த அவர் போலீசாரிடம், எனது கணவர் என்னை தொந்தரவு செய்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
போலீசார் விசாரித்துக் கொண்டிருந்தபோது, சசிகலா திடீரெனத் தான் கையில் மறைத்து வந்திருந்த விஷத்தை எடுத்துக் குடித்து, தற்கொலைக்கு முயன்றார். இதைப்பார்த்த போலீசாரும், சசிகலாவின் சகோதரரும் ஓடி வந்து விஷ பாட்டிலை தட்டி விட்டனர்.
போலீசார், சசிகலா வைத்திருந்த மனுவை வாங்கி கொண்டனர். அவரை, அருகில் உள்ள பென்லேண்ட் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளித்து, பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
எனது கணவர் பெயர் குமார். கஸ்பாவில் வசிக்கிறார். நாங்கள் காதலித்துத் திருமணம் செய்து கொண்டோம். அவருக்கு, குடிப்பழக்கம் உண்டு. அடிக்கடி மதுபானம் குடித்து விட்டு வந்து, என்னிடம் தகராறு செய்வார். நான் பல நாட்கள் பொறுமையாக இருந்தேன். எனினும் அவர் எல்லை மீறி பல தொந்தரவுகளை செய்தார். நான் எனது தாய் வீட்டுக்குச் சென்று விட்டேன். கணவரை பிரிந்து 6 மாதங்கள் ஆகின்றன. தொலைபேசியில் தொடர்பு கொண்டு என்னை மிரட்டுகிறார்.
எனது பெற்றோரையும் அவர் தகாத வார்த்தைகளால் பேசினார். மேலும் அவரது நண்பர்களிடம் எனது செல்போன் எண்ணை கொடுத்து, ஆபாசமாக பேசுமாறு தூண்டி விடுகிறார். அவர்களும் ஆபாசமாக பேசுகிறார்கள். இதுகுறித்து போலீசில் புகார் செய்தால், என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார். கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சசிகலாவின் கணவர் குமாரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X